விதவிதமான அசைவ உணவுகளை தட்டில் நிரப்பி சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருப்பவர்களுக்கு எல்லாம் திகில் கிளப்பக்கூடிய கதை இது. இந்த சம்பவம் சுமார் 73 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்திருக்கிறது. தட்டில் வைக்கப்பட்டிருக்கும் சிக்கன் பீஸ் ஒன்று அசைந்தால் எப்படியிருக்கும்? கொன்று, சுவையூட்ட மசாலா எல்லாம் தடவி அதில் ஊற வைத்து எண்ணெயில் பொறித்த பிறகு அசைவதெல்லாம் சாத்தியமா? வேண்டுமானால் அருகிலிருக்கும் நபர் ஏதேனும் செய்திருக்கலாம் என்று நினைப்பீர்களானால் சற்று நிதானமாக இந்த கதையை படிக்கவும். கோழியை அறுத்துமே அதன் உயிர் பிரிந்து விடும் என்று நம்பிக்கொண்டிருக்கும் நமக்கு இதெல்லாம் கொஞ்சம் ஷாக்கிங் நியூஸ் தான்.