மார்ச் 1 முதல் தமிழகத்தில் எந்த படமும் வெளியாகாது- வீடியோ

  • 6 years ago
மார்ச் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் எந்த திரைப்படமும் வெளியாகாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. எந்த மொழி சினிமாக்களாக இருந்தாலும் அவை டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு பின்னர் திரையரங்குகளில் வெளியாகின்றன. இதற்கு தயாரிப்பாளர்கள் சில கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளது.

ஆனால் டிஜிட்டல் சேவை வழங்குவோர் கூடுதல் கட்டணம் நிர்ணயிப்பதாக தயாரிப்பாளர்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் பயனில்லை.
எனவே மார்ச் 1-ஆம் தேதி முதல் எந்த திரைப்படம் தமிழகத்தில் வெளியாகாது என்று திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

TN Cinema Producer Association announces that there will be no cinema released from March 1 in Tamilnadu, Andhra, Karnataka, Kerala and Telangana. They opposes Digital service providers demands additional price.

Recommended