அமெரிக்காவில் கொல்லப்பட்ட இந்தியரின் மனைவிக்கு ட்ரம்ப் விடுத்த அழைப்பு- வீடியோ

  • 6 years ago
அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் அதிபர் டிரம்ப் அந்த வருடம் குறித்து பேசுவார். அந்த நிகழ்விற்கு மிகவும் முக்கியமான நபர்கள் மட்டும் அழைக்கப்படுவார்கள். இந்த நிலையில் அந்த விழாவிற்கு ஹைதராபாத்தை சேர்ந்த 'சுனாயானா டுமாலா' என்ற பெண் அழைக்கப்பட்டு இருக்கிறார். இவருடைய கணவர் 'ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா' சென்ற வருடம் அமெரிக்காவில் வைத்து கொலை செய்யப்பட்டார். இந்த நிகழ்விற்கு இன்னும் சிலரும் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற வருடம் பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டு மக்களுக்கு எதிராக அடிக்கடி தாக்குதல் நடைபெற்று வந்தது. அப்போதுதான் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா என்ற ஹைதராபாத்தை சேர்ந்த இந்தியர் பாரில் வைத்து கொலை செய்யப்பட்டார். இன்னொரு இந்தியருக்கு இதில் மோசமாக காயம் ஏற்பட்டது.

ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லாவை சுட்ட நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டு நபர்களை வெளியே அனுப்ப வேண்டும் என்று அந்த நபர் பேட்டி அளித்து பரபரப்பு ஏற்படுத்தினார். இந்த சம்பவம் காரணமாக அமெரிக்க அதிபருக்கு எதிராகவும் கருத்துக்கள் பேசப்பட்டது.

Recommended