முட்புதரில் ஆண் குழந்தை..தாயே வீசிய கொடூரம்..வீடியோ

  • 6 years ago
வறுமையினால் பெற்றெடுத்த குழந்தையை தாயே முட் புதரில் வீசியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் காக்கும்பம் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல். டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவருக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் அவரது மனைவிக்கு நேற்று ஆண்குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே மூன்று குழந்தைகளையும் வளர்க்க முடியாமல் தினறி வந்த கதிர்வேலின் மனைவி புதிதாக பிறந்த குழந்தையை என்ன செய்வதென்று தெரியாமல் அப்பகுதியில் உள்ள முட் புதரில் வீசியுள்ளார். முட் புதரில் வீசிய குழந்தை அழுது கொண்டிருந்ததை கண்ட அப்பகுதி மக்கள் குழந்தையை மீட்டதுடன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணை நடத்திய போது கதிர்வேலுவின் குழந்தை என்பது தெரிய வந்தது. உடனே போலீசார் கதிர்வேலு மற்றும் அவரது மனைவி பிடித்து விசாரணை செய்த போது வருமையினால் பிறந்த குழந்தையை முட் புதரில் வீசியதாக தம்பதிகள் தெரிவித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended