எல்லா பிரச்சினைக்கும் காரணம் திமுக ஆட்சிதான்

  • 6 years ago
அரசுக்கு நெருக்கடி தரவேண்டும் என்பதற்காக திமுகவினர் போராட்டத்தை தூண்டுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கையை இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஆகியோர் தலைமை செயலகத்தில் தொடக்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து கூட்டாக இருவரும் செய்தியாளர்கள் மத்தியில் பேசினர். அப்போது விதிப்படி உறுப்பினர் சேர்க்கை, புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து எதிர்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடுவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, போராட்டத்தை திமுகவினர்தான் தூண்டி விடுவதாக கூறினார்.

அரசு போக்குவரத்துக்கழகம் மிகப்பெரிய சேவை நிறுவனம். திமுக ஆட்சிக்காலத்தில்தான் கடன் வாங்கப்பட்டது. அதே போல போக்குவரத்து ஊழியர்களுக்கு தரவேண்டிய நிலுவைத்தொகையும் திமுக ஆட்சி காலத்தில் தரவேண்டியதுதான். கடுமையான நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நிறுவனம் நலிவடைந்து விடக்கூடாது என்பதற்காகவே பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது.

CM Edappadi Palanisamy has said that DMK is the sole reason for all the Ills we are facing now.They are fighting on one side to raise the fare, how to handle the bus fares on the other side The Chief Minister Edappadi Palinichamy question.

Recommended