தேர்தல் ஆணையம் காவல்துறை மீது மருதுகணேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு- வீடியோ

  • 6 years ago
ஆர்கே நகர் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதை தேர்தல் ஆணையமும் காவல்துறையும் தடுக்க தவறி வருவதாக திமுக வேட்பாளர் மருதுகணேஷ் ஒன் இந்தியாவிற்கு அளித்த சிறப்பு பேட்டியில் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆர்கே நகருக்கு இடைத்தேர்தல் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. நாளையுடன் வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்வது முடிவு பெறுகிறது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் ஆர்கே நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு இரவு பகலாக பணம் விநியோகிக்கப்படுகிறது என்றும் பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையமும் காவல்துறையும் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக திமுக வேட்பாளர் மருதுகணேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

Des : DMK candidate Marudhunakash blamed a special interview with Oneindia that the Election Commission and police were failing to pay money for the Arke Nagar voters

Recommended