ஜூலியுடன் செல்ஃபி எடுப்பதற்காகவே கலைஞர் டிவி நிகழ்ச்சிக்கு வந்த டிசிஎஸ் ஊழியர்- வீடியோ

  • 6 years ago
ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியில் டிசிஎஸ் ஊழியர் ஒருவர் மேடைக்கு வந்து ஜூலியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது எடுத்த நல்ல பெயரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கெடுத்துக் கொண்டார் ஜூலி. ஜூலின்னா போலி என்று அனைவரும் சொல்லும்படி நடந்து கொண்டார். தற்போது அவர் கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியில் பார்வையாளராக வந்த டிசிஎஸ் ஊழியரான சத்யா ஜூலியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பினார்.
சத்யா ஜூலியுடன் செல்ஃபி எடுக்க விரும்புவதை அறிந்த கலா மாஸ்டர் அவரை மேடைக்கு வருமாறு அழைத்தார். மேடைக்கு வந்தவருக்கு கை கொடுத்து வரவேற்றார் ஜூலி.
மேடைக்கு வந்தவரிடம் ஜூலி எதுக்கு உங்களுக்கு பிடிக்கும், நிறைய பேர் அவரை திட்டுகிறார்களே என்று கலா மாஸ்டர் கேட்டார். அதற்கு சத்யாவோ, நான் அவரின் ரசிகன். எனக்கு அவரை பிடிக்கும் என்று பதில் அளித்தார்.


A TCS employee came to Odi Vilaiyadu Pappa programme just to take a selfie with Julie. He proudly said on the stage that he is a fan of Julie. Kala master appreciated him for his gesture.

Recommended