டிராவில் முடிந்தது டெல்லி டெஸ்ட்... நூலிழையில் வெற்றியை நழுவவிட்ட இந்தியா- வீடியோ

  • 6 years ago
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய கடைசி நாள் டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்து வந்தது. இலங்கை வீரர்களின் விக்கெட்டை எடுக்க இந்தியா நிறைய முயற்சிகள் செய்து வந்தது. முக்கிய பவுலர்கள் பலரும் விக்கெட் எடுக்க முடியாமல் திணறி வந்தனர். கோஹ்லி, முரளி விஜய் ஆகியோர் கூட பவுலர் அவதாரம் எடுத்தனர். இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளுக்கு 299 ரன்கள் எடுத்த போது ஐந்தாவது நாள் ஆட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. முதல் நாளில் இந்திய அணியின் பேட்டிங் அபாரமாக இருந்தது. மிகவும் அதிரடியாக ஆடிய கோஹ்லி இரட்டை சதம் அடித்தார். இவர் 243 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.ரோஹித் 65 ரன்கள் எடுத்தார்.
முதல் இன்னிங்சில் இந்தியா 536 ரன்கள் எடுத்தது. 7 விக்கெட்டுகள் இழந்து இந்தியா விளையாடிக் கொண்டு இருந்த போது இன்னிங்ஸ் டிக்ளேர் செய்யப்பட்டது.முதல் இன்னிங்சில் இலங்கை அணி மிகவும் நிதானமாக ஆடியது

Third test match between India vs Sri Lanka held today in Delhi. India won the toss and choose to bat first. India got 536 runs for 7 wickets in their first innings. Sri Lanka got 373 their first innings. India got 246 runs for 5 wickets in their 2nd innings. Sri Lanka got 299 runs for 5 wickets in their 2nd innings and match announced as drawn. India won the test series by 1-0 margin

Recommended