வரிசையாக விக்கெட்டுகளை இழந்த இலங்கை.. மூன்றாவது நாள் டெஸ்டில் என்ன நடந்தது?- வீடியோ

  • 6 years ago
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது டெல்லியில் நடந்து வருகிறது.
இந்திய அணியின் பேட்டிங்கை போலவே பவுலிங்கும் மிகவும் சிறப்பாக இருந்தது. இலங்கை வீரர்கள் இந்திய பவுலிங்கை சமாளிக்க முடியாமல் வரிசையாக அவுட் ஆனார்கள்.
இலங்கை அணி மூன்றாம் நாள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் எடுத்து இருக்கிறது. இந்திய வீரர் அஸ்வின் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்.

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. முதல் நாளில் இந்திய அணியின் பேட்டிங் அபாரமாக இருந்தது. முரளி விஜய் மிகவும் சிறப்பாக விளையாடி 155 ரன்கள் எடுத்தார். இரண்டாம் நாள் போட்டியிலும் தொடக்கத்தில் இருந்து மிகவும் அதிரடியாக ஆடிய கோஹ்லி இரட்டை சதம் அடித்தார். இவர் 287 பந்துகளில் 243 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.
இரண்டாம் நாள் கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்த ரோஹித் 65 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்சில் இந்தியா 536 ரன்கள் எடுத்தது. 7 விக்கெட்டுகள் இழந்து இந்தியா விளையாடிக் கொண்டு இருந்த போது இன்னிங்ஸ் டிக்ளேர் செய்யப்பட்டது. இந்த போட்டியில் இலங்கை பல முறை புகையை காரணம் காட்டி பிரச்சனை செய்தது.

Third test match between India vs Sri Lanka held today in Delhi. India won the toss and choose to bat first. India got 536 runs for 7 wickets in their first innings. Sri Lanka got 356 for 9 wicket loss in the end of 3rd day.

Recommended