தமிழகத்தில் பாஜக காலூன்ற முடிவே முடியாது..பாஜகவுக்கு எதிராக வாய்திறந்த செல்லூர் ராஜூ!- வீடியோ

  • 6 years ago
தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடியாக தெரிவித்துள்ளார். இரட்டை இலைச்சின்னத்தை தேர்தல் ஆணையம் ஈபிஎஸ் ஓபிஎஸ் தரப்புக்கு வழங்கியுள்ளது. இதற்கு மத்தியில் ஆளும் பாஜகவே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ புதிய தலைமுறையின் அக்னிப்பரீட்சை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டதை வைத்தே கேள்வியை தொடங்கினார் தொகுப்பாளர் கார்த்திகேயன்.

ராஜேந்திர பாலாஜி கூறியதை போலவே சின்னம் உங்களுக்கே கிடைத்துவிட்டது என்றார் நெறியாளர். மேலே இருப்பவர் பார்த்துக்கொள்வார் என ராஜேந்திர பாலாஜி கூறியது யாரை என்றும் கேட்டார் நெறியாளர் கார்த்திகேயன்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ மேலே இருப்பவர் என ராஜேந்திர பாலாஜி சொன்னது, ஜெயலலிதாவையும் எம்ஜிஆரையும் தான் என விளக்கமளித்தார். எம்ஜிஆர் ஆன்மா, ஜெயலலிதா ஆன்மா பார்த்து கொள்ளும் என்பதே அதன் அர்த்தம் என்றும் அமைச்சர் செல்லூர்ராஜூ தெரிவித்தார்.

BJP can not stand in Tamilnadu said minister Seloor raju. BJP needs alliance in Tamilnadu he said.

Recommended