நெஞ்சில் துணிவிருந்தால் படம் இனி ஓடாது! - இயக்குநர் சுசீந்திரன் திடீர் அறிவிப்பு- வீடியோ
  • 6 years ago
நான்கைந்து முறை பிரஸ் மீட், ட்ரைலர் வெளியீடு, ஆடியோ வெளியீடு, இரு முறை பிரஸ் ஷோ என நெஞ்சில் துணிவிருந்தால் படத்துக்கு தரப்பட்ட ப்ரமோஷன்கள் மாதிரி வேறு எந்தப் படத்துக்கும் தந்ததில்லை. ஆனால் இப்போது படம் வெளியாகி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் படத்தை தியேட்டர்களை விட்டு தூக்கிவிட்டனர் அதன் தயாரிப்பாளர் மட்டும் இயக்குநர். சுசீந்திரன் இயக்கிய இந்தப் படம் கடந்த 9-ஆம் தேதி வெளியானது. விமர்சனங்கள் திருப்தியாக இல்லை. இரு தினங்கள் கழித்து, படத்தின் நாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழு நீக்கியிருந்தது. இதில் 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டதாக சுசீந்திரன் அறிவித்திருந்தார். ஆனால் அப்படியும் ரிசல்ட் திருப்திகரமாக வரவில்லை. மெர்சல் படத்தின் பிரமாண்ட வெற்றி, விஜய்யின் 62 வது படத்துக்கான எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளது. தினமும் படம் குறித்த பரபர தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடிக்கும் படம் இது. சமூக அக்கறை கொண்ட கதையாக உருவாகியுள்ள இந்த ஸ்க்ரிப்டில் இன்றைய அரசியல் சூழலும் இடம் பெற்றுள்ளதாம்.


Sources say that Vijay is going to appear in old getup for his next with AR Murugadoss. Director Suseenthiran has announced to withdraw his Nenjil Thunivirunthal movie from all theaters.

Recommended