முதல்வர் வைக்கும் செக் என்ன தெரியுமா?- வீடியோ

  • 7 years ago
முதல்வரை பகைத்துக் கொண்ட சசிகலா குடும்பத்தின் மிடாஸ் நிறுவனத்திடம் டாஸ்மாக்கிற்கு மதுபானங்கள் கொள்முதல் ஏற்கனவே குறைந்த நிலையில் தற்போது ரெய்டு காரணமாக மிடாஸ் உடனான உறவை முழுவதும் முறித்துக் கொள்ள அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் சசிகலா குடும்பத்தினரை தாக்கி வரும் வருமான வரி புயலானது தொடர்ந்து 100க்கும் மேற்கட்ட இடங்களில் நீடித்து வருகிறது. சசிகலாவின் உறவினர்கள், உறவினர்களின் உதவியாளர்கள், வழக்கறிஞர்கள், ஜோசியர்கள் என்ற ஸ்கெட்ச் போட்டு களமிறங்கி இருக்கும அதிகாரிகள் சென்னை படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலையிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.அதிமுக ஆட்சிக் காலத்தில் மிடாஸ் மதுபான ஆலைக்கு வருமானம் கொட்டோ கொட்டு என்று கொட்டும் இதற்குக் காரணம் டாஸ்மாக்கிற்கு வந்து இறங்கும் பீர் மற்றும் மதுவகைகள் இங்கிருந்து தான் கொள்முதல் செய்யப்படும். ஆனால் ஜெயலலிதா மறைந்த பின்னர் நிலைமை தலைகீழாகிவிட்டது.முதல்வர் பழனிசாமி சசிகலா குடும்பத்தை கட்சி, ஆட்சியில் இருந்து விலக்கி வைக்கத் தொடங்கியதில் இருந்தே டாஸ்மாக்கிற்கு மிடாஸில் இருந்து கொள்முதல் செய்யும் சரக்கு பெட்டிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாம். மாதத்திற்கு சராசரியாக 48 லட்சம் சரக்கு பெட்டிகள் 11 நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்படுகின்றன.

Tamilnadu government is planning to stop the tender of alcohol procurement from Sasikala family owned Midas factory which is under IT sccanner, as CM Palanisamy waited for the right time.

Recommended