வெறும் 9 நிமிடத்தில் பண மதிப்பிழப்பு முடிவுக்கு வந்த மோடி...வீடியோ

  • 7 years ago
இந்தியாவையே பரபரப்புக்குள்ளாக்கி, பல கி.மீ தூரத்திற்கு ஏடிஎம்கள் முன்பாக மக்களை காத்திருக்க வைத்த பண மதிப்பிழப்பு அறிவிப்பு முடிவை பிரதமர் மோடி எடுக்க 9 நிமிட பிரசன்டேசன் ஒன்றுதான் காரணம். கடந்த ஆண்டு, நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டு நாட்டையே பரபரப்பாக்கினார். கருப்பு பணத்தை மீட்கவும், வரி ஏய்ப்பை தடுக்கவும் பண மதிப்பிழப்பு மற்றும் வங்கி பரிவர்த்தனை உதவும் என்பது அரசின் கணிப்பாக இருந்தது.

இவ்வாறு மோடி மற்றும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்ப காரணம், புனேவை சேர்ந்த பொருளாதார நிபுணரும், நிதி ஆலோசகருமான அனில் போகில்.
கடந்த வருடம் நவம்பருக்கு சில மாதங்கள் முன்பு, டெல்லியில் பிரதமரை சந்தித்து கருப்பு பணத்தை ஒழிக்க ஆலோசனை கூறிய அவருக்கு முதலில் கொடுக்கப்பட்டது 9 நிமிட அப்பாயின்மென்ட். ஆனால், அவரது விளக்கத்தால் கவரப்பட்ட மோடி, தொடர்ந்து ஆலோசனை நடத்த ஆரம்பித்ததன் விளைவு, இந்த சந்திப்பு 2 மணி நேரம் நீடித்தது.

It was a nine minute presentation that convinced Prime Minister Narendra Modi to ahead with the decision on demonetisation. November 8 marks a year since the decision to ban the Rs 500 and 1,000 notes were taken

Recommended