தத்தெடுக்கப்பட்ட குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை-வீடியோ

  • 7 years ago
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகானத்தில் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குழந்தையின் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

குழந்தையின் தந்தையே அவளை கொன்றுவிட்டு போலீசில் காணாமல் போனதாக புகார் அளித்தது விசாரணையில் அம்பலம் ஆகியுள்ளது. இந்தக் குழந்தையை போலீசார் காணமால் போனதாக நம்பி கடந்த இரண்டு வாரங்களாக தேடி வந்தனர்.

குழந்தையை கொன்றுவிட்டு பின் உடலை அப்புறப்படுத்திவிட்டு , போலீசில் காணாமல் போனதாக புகார் அளித்துள்ளனர் அந்தக் குழந்தையின் தந்தை.

வெஸ்லி மேத்யூ என்ற நபர் ஒரு வருடத்திற்கு முன்பு ஷெரின் என்ற பெண் குழந்தையை இந்தியாவில் இருந்து தத்து எடுத்தார். இந்த குழந்தையை தன் மனைவியுடன் சேர்ந்து பராமரித்து வந்த இவர் சில வாரங்களுக்கு முன்பு இந்தக் குழந்தை காணாமல் போய்விட்டதாக போலீசில் புகார் அளித்தார்.

இந்த குழந்தை சரியாக பால் குடிக்காததால் அதிகாலை மூன்று மணிக்கு வெளியே நிற்க வைத்ததாகவும், அதன் பின் அந்தக் குழந்தை காணாமல் போய்விட்டதாகவும் இவர் போலீஸ் வாக்கு மூலத்தில் தெரிவித்து இருந்தார்.

The 3-year-old Texas girl missing since Oct. 7 has found dead. Her father told police that he watched his daughter choke on milk and die. He has removed her body from the home and hidden it.

Recommended