அருள் புரிவாய் கருணைக் கடலே - ArulPurivai karunai kadalae
அருள் புரிவாய் கருணைக் கடலே! ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெறவே ! பரிபூர்ண சதானந்த வாரியே ! பக்த ரக்ஷகனே! ,பரமாத்மனே ! அருள் புரிவாய் கருணைக் கடலே! ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெறவே ! அருணோதயம் போல் ஆத்ம சாந்தியும் அறிவும், உண்மை இன்பமும் தருவாய் ! தர்மப் பயிர் காக்கும் ,தருண மாமழையே ! தங்குயிர் எங்கணும் மங்களம் பொங்கவே ! அருள் புரிவாய் கருணைக் கடலே! ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெறவே !