மன்னாரை வந்தடைந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தி

  • 2 days ago
தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
ஊர்தி பவணி இன்றைய தினம் வியாழக்கிழமை (16) மன்னாரை வந்தடைந்தது.

கடந்த 12 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பமானது.

இதன் போது வடக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் குறித்த நினைவேந்தல் ஊர்தி
சென்று முள்ளிவாய்க்கால் வாரம் அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் வாரத்தின் 5 ஆவது நாளான இன்று
வியாழக்கிழமை(16) குறித்த ஊர்தி மன்னாரை வந்தடைந்தது மன்னார் மாவட்ட பேரூந்து
நிலையத்திற்கு முன் அஞ்சலி இடம் பெற்றது.

Recommended