திருப்பத்தூரில் பரபரப்பு; சுமார் 12 சவரன் நகை கொள்ளை!

  • 2 years ago
திருப்பத்தூர் அடுத்த 15-ஆவது வார்டு வள்ளுவர் நகர் பகுதியில் வசிப்பவர் முருகன் (45) இவரது மனைவி கலைச்செல்வி (36). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நாட்றம்பள்ளி அருகே உள்ள பெருமாள் கோவிலுக்கு தன்னுடைய பெண் குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பதற்காக சென்று வந்த இருவரும் வீட்டிற்கு வந்தவுடன் கலைச்செல்வி தன்னுடைய 12 சவரன் நகைகள் அனைத்தையும் பீரோவில் கழற்றி வைத்துள்ளனர்.
பின்பு அதைப் பற்றி எதுவும் கவனிக்காமல் விட்டு விட்ட நிலையில் இன்று திடீரென எதேச்சையாக பீரோவை பரிசோதித்துப் பார்த்ததில் நகைகள் அனைத்தும் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.