வீடு கட்ட குழி தோண்டிய உரிமையாளர்; தட்டுப்பட்ட சிலைகள்!

  • 2 years ago
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள குரு ஸ்தலமான ஆலங்குடி பகுதியில், மண்டித் தெருவில் வசிக்கும் முத்து என்பவர் அவரது இடத்தில் வீடு கட்டுவதற்காக ஜேசிபி எந்திரத்தின் மூலமாக குழி பறித்துள்ளார். இந்த நிலையில், வெட்டப்பட்ட குழிக்குள் சுமார் 3 அடி உயரம் கொண்ட பெருமாள் சிலை, 1 அடி உயரமுள்ள அப்பர் சிலை மற்றும் சிறிய வகை சிலைகள் அடங்கிய உலோக கலையமும் கிடைத்துள்ளது.. இதுகுறித்து ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவரிடம் முத்து தகவல் தெரிவித்துள்ளார்.. அதனை அடுத்து ஊராட்சி மன்ற தலைவர் வலங்கைமான் வட்டாட்சியரிடம் தகவல் தெரிவித்ததின் பேரில், வலங்கைமான் வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தார்..

Recommended