யூஸ் லெஸ் பெல்லோஸ்! அறிவே கிடையாதா? அரசு அலுவலர்களுக்கு வகுப்பெடுத்த கலெக்டர்..!

  • 2 years ago
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வருடாந்தர ஆய்வு நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஒவ்வொரு அலுவலரிடம் சென்று கோப்புகளை திறந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது சில கோப்புகளின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுமக்களிடம் பெற்ற கோப்புகளின் மீது எடுத்த நடவடிக்கை என்ன? எனக் கேள்வி கேட்டறிந்தார். தொடர்ந்து ஒரு அலுவலரிடம் கோப்புகளை பெற்று 8 மாதங்கள் ஆகிய நிலையில், கையொப்பமிட்டும், உயர் அதிகாரிகளுக்கு அனுப்பாமல் மறைத்து வைத்தது இருந்ததை கண்டுபிடித்த ஆட்சியர், என்னைய்யா பண்ணுறீங்க ஆபீஸ்ல? யூஸ் லெஸ் பெல்லோஸ் என்ன வேலை பாக்குறீங்க என்ன கோபமடைந்தார்.

Recommended