#KARURBOOMI #கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை மற்றும் பரவலான மழை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி

  • 2 years ago
கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை மற்றும் பரவலான மழை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி

கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று காலை 11.30 மணியளவிலிருந்து மதியம் 1.30 மணிவரை கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம், மாயனூர், மணவாசி, வீரராக்கியம், புலியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீர் மழை லேசாகவும், பரவலாகவும் பெய்தது. இந்நிலையில், கரூர் மாநகரில் அவ்வப்போது லேசான தூரல் மட்டும் அவ்வப்போது பெய்தது. ஆனால், மேக மூட்டத்துடன் பல்வேறு பகுதிகளில் மேக மூட்டம் காணப்பட்டது. ஒரு சில பகுதிகளில் மட்டும் லேசான மழையும், பரவலான மழையும் பெய்த நிலையில், மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Recommended