சிதம்பரம் சிற்றம்பலம் மேடை விவகாரம் - வெளியான அதிரடி அறிவிப்பு!

  • 2 years ago
சிதம்பரம் நடராஜர் கோயில் சன்னதியில் சிற்றம்பலம் மேடை என்று சொல்லப்படும் கனகசபையின் மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுத்தது தொடர்பான கடந்த சில மாதங்களாக பிரச்சனை இருந்து வந்தது அதனை தொடர்ந்து சிற்றம்பலம் மேடையேறி தேவாரம் திருவாசகம் பாடுவதற்கு சம்பந்தமாக அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சட்டப் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு சிதம்பரம் பகுதியில் மேற்கண்ட நடராஜர் கோவில் சம்பந்தமாக அரசியல் கட்சிகள் சமூக இயக்கங்கள் ஆர்ப்பாட்டம் செய்ய 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக சிதம்பரம் ஆர்டிஓ ரவி உத்தரவு பிறப்பித்து அறிவிப்பு செய்துள்ளார்.