அனுமதியின்றி மண் திருட்டு; போலீஸ் அதிரடி வேட்டை!

  • 2 years ago
திருப்பத்தூர் மாவட்டம் ,ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அப்பகுதி வழியாக வந்த இரண்டு டிப்பர் லாரிகளை மடக்கி சோதனை மேற்கொண்டதில் அந்த லாரியில் உரிய ஆவணம் மற்றும் அனுமதியின்றி மொரம்பு மண் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து உரிய ஆவணம் மற்றும் அனுமதியின்றி டிப்பர் லாரிகளில் மொரம்பு மண் கடத்தி வந்த இரண்டு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்த காவல் துறையினர் லாரியை ஓட்டி வந்த வெங்கிளி பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் மற்றும் சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோரை கைது செய்து லாரி உரிமையாளர் கணேஷ் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Recommended