பாமகவினர் திடீர் சாலை மறியல் போராட்டம்; இதாங்க காரணம்!

  • 2 years ago
புதியதாக தரம் உயர்த்தப்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் துணை மேயருக்கான வேட்புமனுவை பெற பா.ம.கவினர் இன்று காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.அப்போது அங்கு தேர்தல் நடத்தும் அதிகாரி,உள்ளிட்ட எவ்வித தேர்தல் அலுவலர்களும் யாருமில்லாததால் மேயர் துணை மேயர் வேட்புமனுவை வாங்க முடியாததால் ஆத்திரமடைந்த பா.ம.கவினர் மாநகராட்சி அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பா.ம.கவினரின் திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Recommended