#chithiraitv #ஜெய்பீம் திரைப்படத்தில் உண்மை திருடன் யார் ? அவருக்கு என்ன தண்டனை கொடுத்தாய் – கரூரில் பாமக மாநில துணை பொதுச்செயலாளர் பி,எம்.கே.பாஸ்கரன் அதிரடி பேட்டி
  • 2 years ago
கரூரில் பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எலிவேட்டை என்கின்ற திரைப்படத்தினை தயாரித்து அந்த திரைப்படத்திற்கு நேர் எதிர்மறையாக சித்தரித்து பணம் சம்பாதிக்க திட்டம் தீட்டியவர்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா ஆகியோர் தயாரித்து தற்போது ஜெய்பீம் என்ற திரைப்படமாக வெளியிட்டுள்ளனர். மேலும், தமிழக மக்கள் ஒவ்வொருவரும் அருவறுக்கத்தக்க, செயல்களை தனது படத்தின் மூலம் கொண்டு வந்து மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துவதற்காகவும், இந்த ஜெய்பீம் திரைப்படம் ஒடிடி மூலம் வெளியிட்டிருப்பதினால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை, ஆனால் திரையரங்கில், ஒட்டியிருந்தால் திரையரங்கு உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இல்லாத டிரஸ்ட்டிற்கு, ஒரு போலியான அட்டை படத்தினை காசோலை மூலம் காட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையே ஏமாற்றி, அவரிடம் ரூ 1 கோடி கொடுத்த்து போல் நடித்துள்ளார்கள், பாவம் தமிழக முதல்வரும், இவர்கள் நடித்த ஜெய்பீம் பட்த்தின் பின்னணி என்று தெரியாமல், அவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். மேலும், இந்த படத்தின் இயக்குநர் யாரோ ஒருவரை திருப்தி படுத்த நினைத்து இந்த ஜெய்பீம் படத்தினை தயாரித்து இருக்கின்றார். சூர்யா ஒரு சாதாரண நடிகர், நடிகர் என்றால் யார் என்ன வேடத்தில் நடிக்க சொல்கின்றாரோ, அந்த வேடத்தில் நடிக்க வேண்டும், ஆகவே நடிகர் சூர்யா தமிழக மக்களை ஏமாற்றி வேடம் போட்டு வருகின்றார். மேலும், நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் அவரது மனைவி ஜோதிகா மற்றும் குடும்பத்தினர் சம்பாதிக்கும் பணத்திற்கு முதலில் வரியை கட்டு, அதை விட்டு விட்டு 30 பிள்ளைகளை படிக்க வைக்கின்றோம் நினைத்து பொய் கணக்கு காட்டி வெளிநாட்டில் இருந்து பணம் வாங்குகின்றாய் என்று புட்டு புட்டு நடிகர் சூர்யாவினை வசை பாடினார். முதலில் நடிகர் சிவக்குமார், அவரது மூத்த மகன், நடிகர் சூர்யாவினை நல்ல முறையாக வளர்க்க வில்லை, ஆகவே, தவறான கண்ணோட்டத்தில் பார்த்து வளர்த்துள்ளார். மேலும், தற்போது வந்த குருப்பெயர்ச்சி நடிகர் சூர்யாவிற்கு சரியில்லை என்றும் அவர் வன்னிய சமுதாயத்தினரையும், பாமக வினரையும் மோதவிட நினைக்கின்றார் என்றும், ஜெய் பீம் திரைப்பட்த்தில் முதல் சீனில். நீ அந்த ஜாதியா, நீ இந்த ஜாதியா என்று ஜாதி, ஜாதியாக வகைப்படுத்தி அசிங்கப்படுத்தி இருக்கின்றாய், உண்மையான செங்கேணி பார்வதிக்கு நீ (நடிகர் சூர்யா) சம்பாதிக்கும் படத்தில் ராயல்ட்டி கொடு, என்றும் அதிரடியாக பேட்டியளித்தார். மேலும், அந்த ஜெய்பீம் திரைப்படத்தில் உண்மை திருடன் யார், அவருக்கு என்ன தண்டனை கொடுத்தாய், நடிகருக்கும், இயக்குநருக்கும் சவால் விட்டார். அதை விட்டு விட்டு திருடனுக்கு என்ன தண்டனை என்று கூற மாட்டாய், பொய்யாக சாதிவேறுபாடுகளை திரைப்படத்தின் மூலம் காட்டி அதன் மூலம் சுயவிளம்பரம் மட்டும் தேடிக் கொள்வாயா என்றும் பாமக மாநில துணை பொதுச்செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் அதிரடியாக பேட்டியளித்தார். மேலும், வர உள்ள பிற நாட்களில் கரூர் மட்டுமில்லாமல், தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகள் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தினை பாதிக்கும் வண்ணம் அவரது குடும்பத்தினர் எடுக்கும் ஒடிடி படத்தினை கருத்தில் கொண்டு, நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா ஆகியோர் நடிக்கும் திரைப்படத்தினை திரையரங்குகளில் வெளியிட தடை விதிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண
Recommended