#chithiraitv #கோவை - தொடர் மழையின் காரணமாக தீப திரு விழாவுக்கு விளக்குகள் தயாரிக்கும் பணி மந்தம் |

  • 3 years ago
சித்திரையில் துவங்கி பங்குனி வரை, 12 மாதங்களுக்கும் தனிச் சிறப்பு உண்டு. அதில், மழைப் பொழிவு அதிகமுள்ள கார் காலம் கார்த்திகை மாதம் என அழைக்கப்படுகிறது. மேலும், கார்த்திகை மாதங்களில் வீடுகள், கோவில்களில் மண் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.
இதையடுத்து, கோவை அடுத்த கவுண்டம்பாளயைம் பகுதிகளில் தலைமுறை தலைமுறையாக 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண் விளக்குகள் தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை மற்றும் குறைந்த தாழ்வு நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த, ஒரு வாரமாக மழை பெய்து வருவதால், கார்த்திகை தீப விழாவுக்காக மண் விளக்குகள் தயாரிக்கும் பணி மந்தமாக உள்ளது. இதுகுறித்து, மண் விளக்கு உற்பத்தியாளர்கள் கூறியதாவது: களிமண் விளக்குகளை தயார் செய்து காய வைத்து, சூளையில் வைத்து வேக வைக்க வேண்டும். ஆனால், தொடர் மழை பெய்து வருவதால், கடந்த ஒரு வாரமாக மண் விளக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தீப திருவிழாவுக்கு இன்னும், சில நாட்கள் உள்ள நிலையில் மழை நின்றால் மட்டும், மண் விளக்குகளை அதிகளவில் உற்பத்தி செய்ய முடியும். தற்போது, உற்பத்தி குறைவதால் மண் விளக்குகள் விலை ஏற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர்

Recommended