"என் கணவர் இறந்த மூணாவது நாள் தொடங்கி இன்னைக்கு வரைக்கும் பாரம்பர்ய அரிசி மற்றும் நெல் ரகங்களைப் பாதுகாத்துக்கிட்டு வர்றேன்" என்று உருக்கமாக ஆரம்பிக்கிறார், மேனகா. 'மண்வாசனை' என்ற பெயரில் பாரம்பர்ய நெற்களைப் பரப்பும் பணிகளைச் செய்து கொண்டிருக்கும் மேனகாவைச் சந்தித்துப் பேசினோம்.