தமிழகத்தில் பெருந்தொற்று பாதிப்பு தற்போதைய நிலவரம்

  • 3 years ago
தமிழகத்தில் மேலும் 512 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு 8 லட்சத்து 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் தினந்தோறும் பெருந்தொற்று பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் 512 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பெருந்தொற்று பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 36 ஆயிரத்து 315 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் 159 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்து 675ஆக உயர்ந்துள்ளது. பெருந்தொற்று பாதிப்பில் இருந்து 8 லட்சத்து 19 ஆயிரத்து 306 பேர் குணமடைந்துள்ள நிலையில், 4 ஆயிரத்து 676 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் பெருந்தொற்றுக்கு 8 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 12 ஆயிரத்து 333 ஆக அதிகரித்துள்ளது.

Recommended