தமிழகத்தில் பெருந்தொற்று பாதிப்பு தற்போதைய நிலவரம்
- 3 years ago
தமிழகத்தில் மேலும் 512 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு 8 லட்சத்து 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
தமிழகத்தில் தினந்தோறும் பெருந்தொற்று பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் 512 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பெருந்தொற்று பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 36 ஆயிரத்து 315 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் 159 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்து 675ஆக உயர்ந்துள்ளது. பெருந்தொற்று பாதிப்பில் இருந்து 8 லட்சத்து 19 ஆயிரத்து 306 பேர் குணமடைந்துள்ள நிலையில், 4 ஆயிரத்து 676 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் பெருந்தொற்றுக்கு 8 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 12 ஆயிரத்து 333 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தினந்தோறும் பெருந்தொற்று பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் 512 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பெருந்தொற்று பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 36 ஆயிரத்து 315 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் 159 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்து 675ஆக உயர்ந்துள்ளது. பெருந்தொற்று பாதிப்பில் இருந்து 8 லட்சத்து 19 ஆயிரத்து 306 பேர் குணமடைந்துள்ள நிலையில், 4 ஆயிரத்து 676 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் பெருந்தொற்றுக்கு 8 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 12 ஆயிரத்து 333 ஆக அதிகரித்துள்ளது.