Skip to playerSkip to main contentSkip to footer
  • 11/6/2020
Reporter- ஜெ.முருகன்
Camera- அ.குரூஸ்தனம்
ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி ரூ.30 லட்சம் வரை கடன் ஏற்பட்டதால் விரக்தியடைந்த புதுச்சேரி இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
``என்னை மன்னிச்சிடு மதி...”
’ஆன்லைன் ரம்மி’ என்ற இணையத்தள சூதாட்டத்தால் தங்கள் சேமிப்புகளை இழப்பதுடன், கடன்காரர்களாகி தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. புதுச்சேரி, வில்லியனூரை அடுத்திருக்கும் கோர்க்காடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் விஜயகுமார், வயது 38. இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் என இரு குழந்தைகள் இருக்கின்றனர். தனியார் செல்போன் நிறுவனம் ஒன்றின் சிம் கார்டுகளை விற்கும் மொத்த விற்பனையாளராக இருந்த இவர், கொரோனா ஊரடங்கு காலத்தில் பொழுதுபோக்கிற்காக ஆன்லைன் ரம்மி விளையாடத் துவங்கினார். #onlinerummy #rummy #shocking

Category

🗞
News

Recommended