Skip to playerSkip to main contentSkip to footer
  • 11/6/2020
Reporter - வெ.கௌசல்யா
மார்ச் 21 அன்று தன்னுடைய துணிகளை எடுப்பதற்காக எங்களுடைய தந்தை வீட்டுக்கு வந்திருந்தார். அன்று முதல் நாங்கள் எங்கள் தந்தையை எங்களுடைய வீட்டில் பார்க்கவில்லை.

கடந்த மார்ச் மாதம் முதல் 200-க்கும் அதிகமான கொரோனா நோயாளிகளின் உடல்களை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர், டெல்லியில் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இவரால் பெறப்பட்ட உடல்கள், முறையாக நல்லடக்கம் செய்வதைத் தொடர்ந்து கண்காணித்துவந்தார். ஆனால், வைரஸால் இறந்த அவரது உடலைச் சொந்தக் குடும்பத்தினரிடம்கூட கொடுக்க முடியவில்லை. சில நிமிடங்களுக்கு தூரத்திலிருந்தே அவரின் உடலைப் பார்த்தார்கள் அவரின் குடும்பத்தினர்.

Category

🗞
News

Recommended