Skip to playerSkip to main contentSkip to footer
  • 11/6/2020
Reporter - இ.கார்த்திகேயன்

மேய்ச்சலின்போது ஆட்டுக்குட்டி ஒன்று மற்றொருவரின் மந்தைக்குள் புகுந்ததால், குட்டியைப் பிடிக்க முயன்றவரின் சமூகத்தைச் சொல்லி மற்றொரு சமூகத்தினர் அவதூறாகப் பேசி, காலில் விழவைத்து மன்னிப்புக் கேட்கவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் தாலுகா ஓலைக்குளம் கிராம், வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர், ஆடு மேய்க்கும் தொழில் செய்துவருகிறார். இவருக்கும் ஆடு மேய்த்துவரும் அதே ஊரைச் சேர்ந்த சிவசங்குவுக்கும் ஒரே இடத்தில் ஆடுகளை மேய்த்தது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்தநிலையில், கடந்த 8-ம் தேதி மேய்ச்சலின்போது பால்ராஜின் ஆடுகளில் ஒரு குட்டி, சிவசங்குவின் ஆட்டு மந்தைக்குள் சென்றுவிட்டதாம். மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், சிவசங்குவின் உறவினர்கள் சிலர், பால்ராஜை சிவசங்குவின் காலில் விழுந்து கும்பிட்டு மன்னிப்புக் கேட்கச் சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Category

🗞
News

Recommended