சிக்கப்போகும் மூன்று அமைச்சர்கள்...அடுத்த செக் யாருக்கு? #TNPolitics
  • 3 years ago
அ.தி.மு.க-வையும் இந்த ஆட்சியையும் இத்தனை நாட்களாக டெல்லி ஆட்சியாளர்கள் உயிர்ப்புடன் வைத்திருப்பதே, சில பல காரணங்களுக்காகத்தான். ஆனாலும், தற்போதைய அ.தி.மு.க மற்றும் அதன் ஆட்சியில் இருப்பவர்களை வைத்துக்கொண்டு எதையும் சாதிக்க முடியாது என்கிற நிலைக்கு வந்துவிட்டனர். பெரிதாக மக்கள் செல்வாக்குள்ள தலைவர்கள் யாரும் அதில் இல்லை. தங்களின் சொல்படி ஆடுகிறார்கள் என்றாலும், பல சமயங்களில் காலைவாரிவிடுகிறார்கள் என்ற கோபமும் எழுந்திருக்கிறது. அதனால்தான், இந்த ஆட்சியே தேவையில்லை என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டு, அவ்வப்போது ரெய்டுகள் எல்லாம் நடத்தப்படுகின்றன.

#TamilnaduPolitics #PoliticalNews
Recommended