கட்சினா தீபா ஓகே ! சட்டமன்றம்னா தீபா நாட் ஓகே ! அடுத்த அதிரடி !

  • 4 years ago
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தின் மர்மம் குறித்த, பொதுமக்களின் சந்தேகங்களை நீர்த்துப் போகச் செய்யாமல் தினம்தினம் அதிரடிகளைக் கிளப்பி வருகிறது பன்னீர்செல்வம் அணி. குடியரசுத் தலைவரிடம் மனு கொடுத்த கையோடு, ஜெயலலிதாவுக்கு வந்த நோயின் தன்மை குறித்து வெளிப்படையாகப் பேசினார் மைத்ரேயன் எம்.பி. நேற்று முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், மருத்துவமனையின் சி.சி.டி.வி கேமராக்கள் குறித்தும் சிகிச்சை முறைகள் குறித்தும் பத்திரிகையாளர்களிடம் விளக்கினார். “மக்கள் மனதில் ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகங்கள் தெளிவுபடுத்தப்படவில்லை. இந்த விவகாரத்தில் சசிகலாவை குற்றவாளியாக மக்கள் பார்க்கிறார்கள். இந்தப் பார்வையை நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போலோவில் நடந்த விவகாரங்களுக்கு நாம் விசாரணைக் கமிஷன் கோருவதையும் மக்கள் விரும்புகிறார்கள். தேர்தல் ஆணையத்தில் இருந்து சசிகலா நியமனம் குறித்து அதிரடியான பதில் வெளிவரும் என நம்புகிறோம். உண்மையான அ.தி.மு.க நாம்தான் என்பதை மக்கள் மன்றத்தில் எளிதாகவே நிரூபிப்போம்” என விளக்கிய பன்னீர்செல்வம் அணியின் ஆதரவாளர் ஒருவர்,

Recommended