Skip to playerSkip to main contentSkip to footer
  • 11/6/2020
Reporter - மு.இராகவன்
Camera - பா.பிரசன்ன வெங்கடேஷ்
பொதுவாக, ஒவ்வொருபடியிலும் என்னென்ன பொம்மைகள் வைக்க வேண்டும் என்பது குறித்துக் கூறும்போது, உயிர்களின் அறிவின் அடிப்படையில் பொம்மைகளின் வரிசை அமைய வேண்டும் என்று சொல்வதுண்டு.
படைத்தல், காத்தல், அழித்தல் எனும் மூன்று சக்திகளைக் கொண்ட அன்னையின் அருள் வேண்டி பூஜை செய்வதே நவராத்திரி வழிபாடாகும். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னிகையர்களை பூஜிக்க வேண்டும்.
நவராத்திரியின் முதல் மூன்று நாள்களும் இச்சா சக்தியின் தோற்றமான துர்கையின் ஆட்சிக்காலம் என்றும், நடுவில் உள்ள மூன்று நாள்களும் ஞானசக்தியின் தோற்றமான லட்சுமியின் ஆட்சிக்காலம் என்றும், இறுதி மூன்று நாள்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம் என்றும் சாஸ்த்திரத்தில் வகைபடுத்தியுள்ளனர்.

Category

🗞
News

Recommended