``கிராமத்துல யார் பேபி போட்டோகிராபியை விரும்புவாங்க, பிறந்த குழந்தையை போட்டோ எடுக்க விடமாட்டாங்கனுதான் நான் நினைச்சேன். ஆனா, நான் நினைச்சதைவிட மக்கள்கிட்ட இதுக்கு அதிக வரவேற்பு கிடைச்சது. பிறந்து 12 நாள்களான குழந்தையிலிருந்து 2 வயதுக் குழந்தை வரை, தேனியில மட்டும் இந்த 8 மாதங்கள்ல 35 குழந்தைகளை போட்டோ எடுத்திருக்கேன்” என உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார் சாந்தினி. #baby