மனிதர்களைத் தவிர்க்கும், மனிதர்களைக் கண்டாலே ஓடி ஒளியும் மரக்கிளை வாழ்வியான மலை அணில் ஒன்று, பழக்கடைக்கு எப்படி வந்தது என்ற ஆச்சர்யத்தோடு நசீமாவிடம் பேசினோம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா நுழைவு வாயில் அருகில் உள்ள சாலை ஓரத்தில் சுற்றுலாப் பயணிகளை நம்பி சிறிய பழக்கடை ஒன்றை நடத்திவருபவர் நசீமா.