ஏரி மற்றும் குளங்களை தூர் வாரும் பணியை தொடங்கிய ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்- வீடியோ

  • 5 years ago
தமிழகத்தில் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. மேலும் புதுச்சேரியில் தற்போதைய சூழ்நிலையில் தண்ணீர் பஞ்சம் இல்லை என்றால் எதிர்வரும் காலத்தில் தமிழ்கத்தை போல் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்கு புதுச்சேரி அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் மழைக்காலத்திற்கு முன்பாக புதுச்சேரியில் உள்ள ஏரி மற்றும் குளங்களை தூர் வார புதுச்சேரி மாநில ரஜினி மக்கள் மன்றத்தினர் முடிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து இன்று உழவர்கரை தொகுதிக்குட்பட்ட மூலகுளம் குளத்தை 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தூர்வாரி, பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி கரைகளை பலப்படுத்தினர். மழை காலத்திற்கு முன்பாக வார இறுதி நாட்களில் புதுச்சேரியில் உள்ள அனைத்து ஏரி மற்றும் குளங்களை தூர்வாரப்படும் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

des : More than 100 Rajini People's Forum Administrators begin work on Pondicherry lake and ponds before rainy season.

Recommended