அகில இந்திய அளவிலான 60வது கூடைப்பந்து போட்டி

  • 5 years ago
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் அமரர் பி.டி. சிதம்பரசூரிய நாராயணன் நினைவு சுழற்கோப்பைக்கான 60-ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் கடந்த 15ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. இதில் 6வது நாளான இன்று இறுதி லீக் சுற்று போட்டிகள் நடைபெற்றது இதில் முதலாவதாக நடைபெற்ற போட்டியில் பாங்க் ஆப் பரோடா பெங்களூர் அணியும், ஏ.ஓ.சி செகந்திராபாத் அணியும் மோதியதில் பாங்க் ஆப் பரோடா பெங்களூர் அணி 103க்கு 69 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியன் வங்கி சென்னை அணிக்கும் இந்திய தரைப்படை ரெட் புதுடெல்லி அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் இந்தியன் வங்கி சென்னை அணி 79க்கு 69 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற லீக் சுற்று போட்டிகளில் போட்டியில் பாங்க் ஆப் பரோடா பெங்களூர் அணியும், இந்தியன் வங்கி சென்னை அணியும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதால் நாளை நடைபெறும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நாளை மாலையில் இறுதி போட்டிகள் நடக்க உள்ளது.

Recommended