சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் தடை

  • 5 years ago
தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி,
கலைச்செல்வன், பிரபு ஆகியோரை
தகுதி நீக்கம் செய்ய
சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.
அதை எதிர்த்து, ரத்தினசபாபதி, கலைச்செல்வன்
சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றனர்.

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
நிலுவையில் இருப்பதால்
எம்.எல்.ஏ.க்கள் மீது
நடவடிக்கை எடுக்க முடியாது என,
2 எம்.எல்.ஏ.க்களின் சார்பில்
வாதம் முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து,
சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு
சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது.
நீதி வென்றது என எம்.எல்.ஏ.க்கள் கூறினர்.

Recommended