தேர்தல் முடிந்தவுடன் குடும்ப அட்டைக்கு ரூ2000 பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வாக்குறுதி

  • 5 years ago
திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை மற்றும் பொதட்டூர்பேட்டையில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ஏகே மூர்த்தியை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மாம்பழம் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய ராமதாஸ்இ தமிழகத்தில் அதிமுக ஆட்சி மக்களுக்கு அதிக அளவில் நல்ல பல திட்டங்களை செய்து வருகிறது கடந்த பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கியது. தேர்தல் முடிந்தவுடன் குடும்ப அட்டைக்கு 2000 ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது என தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் அமைந்துள்ள மகா கூட்டணி மெகா கூட்டணி தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் சட்டமன்றத் தொகுதிகள் அனைத்திலும் அமோக வெற்றி பெறும் என்றும் பேசினார் இந்நிகழ்ச்சியில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் கோ ஹரி திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் நரசிம்மன் அனைத்து கூட்டணி கட்சிகளின் மாவட்ட நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்

DES : When the election was over, Ramadoss's promise of Rs.2000 proletarian People's Party to the family card

Recommended