மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல்

  • 5 years ago
தொலைபேசி மூலம் வந்த தகவலையடுத்து வெடிகுண்டு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அதிரடி சோதனையால் பரபரப்பு. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் வைக்கப்பட்ட வெடிகுண்டு சற்று நேரத்தில் வெடிக்கப் போவதாக சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலை அடுத்து சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு காவல்துறையினர் சேலம் மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் சேலம் மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்ட போலீசார் அங்குள்ள குப்பைத் தொட்டிகளை சல்லடை போட்டு தேடினர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் ஒவ்வொரு இடத்திலும் துருவித்துருவி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது. ஆனால் இதுவரை மிரட்டலின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விடுக்கப்பட்ட வெடிகுண்டு புரளி சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Threatening to have a bomb in the Collectorate of Salem

#Salem
#CollectorOffice
#SalemPolice

Recommended