தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது- அமைச்சர் ஜெயக்குமார்- வீடியோ

  • 5 years ago
தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக தொடர்ந்து நடந்து வருகிறது. அழகிரி எப்போதுமே எதார்த்தமாக பேசக் கூடியவர். முக ஸ்டாலினை விட முக அழகிரிக்கு யதார்த்த நிலை எப்போதும் தெரியும். என்றார்
மேலும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் பேசுவதாகதான் கூறினேன். விசிகவோ, கம்யூனிஸ்ட்களோ பேசுவதாக நான் கூறவில்லை. தமிழக நலன், தமிழர்கள் நலன், மாநில உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்தல் அறிக்கை இருக்கும். என்றார்

Minister jayakumar about alliance with dmdk.

Recommended