சாலை பாதுகாப்பு முன்னிட்டு மாநகர காவல்துறை சார்பில் இருசக்கர வாகன பேரணி Guards helmet march

  • 5 years ago
தமிழகம் முழுவதும் சாலை பாதுகாப்பு வார விழாஆண்டுதோறும் பிப்ரவரி முதல் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி சேலத்தில் சாலைபாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு சேலம் மாநகர காவல் துறை சார்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஹெல்மெட் அணிந்து பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இந்த பேரணியை சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கர் துவக்கி வைத்தார்.
இதற்கு முன்பாக சேலம் மாநகர காவல் ஆணையர் சாலையில் ஹெல்மெட் அணிந்து வாகனங்களை இயக்கும் வாகனஓட்டிகளை ஊக்கப்படுத்தும் விதமாக சாக்லேட் மற்றும் பேனா வழங்கி ஊக்கப்படுத்தினார். மேலும் நான்கு சக்கர வாகனஓட்டிகளுக்கு மாநகர காவல் ஆணையரே சீட் பெல்ட் அணிவித்து அறிவுரை வழங்கினார்.
Guards helmet march

Recommended