பன்றி காய்ச்சல் பரவுகிறது

  • 5 years ago
ட மாநிலங்களில்
பல உயிர்களை பலி வாங்கிய பன்றி காய்ச்சல்
தமிழ்நாட்டுக்கும் பரவி இருப்பதாக
மத்திய அரசு எச்சரித்துள்ளது.

தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா உட்பட
8 மாநிலங்களில் பன்றி காய்ச்சல் பாதிப்பும்
மரணங்களும் பதிவாகி உள்ளன.

ஜனவரி 1 முதல் 13 வரை மட்டுமே
49 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இந்த காலகட்டத்தில்
48 பேரை பன்றி காய்ச்சல் பாதித்துள்ளது.

H1N1 ஜுரம் என குறிப்பிடப்படும் பன்றி காய்ச்சல்
வேகமாக பரவக்கூடிய தொற்று நோய்.
பன்றியிடம் உருவாகும் வைரஸ் என்றாலும்
மனிதரில் இருந்து மனிதருக்கும் பரவுவதை
இப்போது கண்டறிந்துள்ளனர் டாக்டர்கள்.

2017 ம் ஆண்டில் 39,000 பேரை பாதித்த
பன்றி காய்ச்சல் 2300 உயிர்களை குடித்தது.
சென்ற வருடம் 15,000 பேர் பாதிக்கப்பட்டு
அதில் 1,100 பேர் மரணம் அடைந்தனர்.

5 வயதுக்கு கீழான குழந்தைகள்,
65 வயது தாண்டிய பெரியவர்கள்,
ஆஸ்த்மா, நரம்பு கோளாறு, நீரிழிவு பாதித்தவர்கள்,
கர்ப்பிணிகள், குண்டு மனிதர்களை
பன்றி காய்ச்சல் சுலபமாக தாக்குகிறது.

Recommended