இறந்தும் மகன் செய்த சேவை.. கதறிய பெற்றோர்.. ஆட்சியர் ஆறுதல்

  • 5 years ago
மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் பாகங்கள் தானமாக வழங்கிய வாலிபரின் தாயாருக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து உடல் உறுப்புகள் தானத்திற்கான சான்றிதழ் வழங்கி கூறி ஆறுதல் கூறினார்.நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பாபநாசம் டாணாவை சேர்ந்தவர் பழனிகுமார்( 39) இவருக்கு தந்தை இல்லை தாயார் மட்டுமே உள்ளது. இந்நிலையில் பழனிகுமார் கடந்த மாதம் 2 தேதி வாகன விபத்தில் சிக்கி பாளை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தார் ஆனாலும் பழனிகுமார் மூளை சாவு அடைந்ததை மருத்தவர்கள் உறுதி செய்து தகவலை அவரின் தாயாரிடம் கூறியுள்ளார்.இதனால் பழனிகுமாரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முடிவுசெய்து தமிழகத்தில் சென்னை ,கோவை, மதுரை, போன்ற மருத்துவமணைகளில் உடல் உறுப்புகள் தேவையானவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பழனிக்குமாரின் தாயாரை நேரினில் சந்தித்து உடல் உறுப்புகள் வழங்கியதற்கான சான்றிதழ் மற்றும் அரசால் வழங்கப்படும் மாத ஊதிய திட்டத்திற்கான ஆணையையும் வழங்கி ஆறுதல் கூறினார்.



Des: The death of the son of the dead and the good parents .. the comfort of the audience

Recommended