தென்னை மட்டும் தான் மரமா... கார்த்திக் சிதம்பரம்- வீடியோ
  • 5 years ago
தென்னை பற்றி மட்டுமே பார்கிறார்கள், மற்ற மரங்களை பற்றிய விவரங்களை கேட்பதில்லை என கார்த்திக் சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்

மதுரை விமான நிலையத்தில் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டேன்.வாழை, தென்னை போன்ற மரங்கள் அடியோடு அழிந்து விட்டன.தற்போது நஷ்ட ஈடு கொடுத்தாலும் பின் அவர்களின் வாழ்வாதாரம் குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் என்னவாகும் என்று தெரியவில்லை.புயலால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஆய்வுக்கு வருபவர்கள் தென்னை பற்றி மட்டுமே பார்கிறார்கள், மற்ற மரங்களை பற்றிய விவரங்களை கேட்பதில்லை என்று மக்கள் கூறுகின்றனர்தென்னை விவசாயிகள் மரம் நட வேண்டும் என்றால் 7, 8 வருடம் ஆகிவிடும் எனவே அதற்கு தேவையான அளவு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்தற்போது மின் ஊழியர்கள் மிக கடுமையாக வேலை பார்த்து வருகின்றனர்.புயலால் பாதிக்கப்பட்ட நிவாரண பகுதிகளில் அமைச்சர்கள் மக்களின் வேகத்திற்கு ஈடு கொடுத்து அரசு செயல்பட வேண்டும். இதுவே மக்களின் கோபத்திற்கான காரணம் என கார்த்தி சிதம்பரம் கூறினார்

Des: Karthik Chidambaram blames only coconut and does not listen to other trees
Recommended