10ஆம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு மருத்துவம்! போலி மருத்துவர் கைது - வீடியோ

  • 5 years ago
அரக்கோணம் அருகே 10ஆம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது

வேலூர்மாவட்டம்,அரக்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் போலி மருத்துவர்கள் மருத்துவர் பார்த்து வருவதாக பல புகார்கள் எழுந்தன இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரக்கோணம் அடுத்த அன்வர்திகான்பேட்டையில் ரியாஸ் என்ற சிறுவன் காய்ச்சல் காரணமாக பலியானான். இது குறித்து விசாரணை மேற்க்கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அச்சிறுவன் காய்ச்சலின் போது மருத்துவம் பார்த்த தனியார் கிளினிக் மீது தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர் சுகாதாரத்துறை இணை இயக்குனர் யாஸ்மீன் தலைமையிலான குழு காவல்துறையினரின் உதவியோடு நோயாளிகள் போல் கிளினிக்கில் நுழைந்து மருத்துவம் பார்க்கும் போது போலி மருத்துவரை கையும் களவுமாக பிடித்து அரக்கோணம் கிராமிய காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு விசாரணை மேற்க்கொண்டதில் போலி மருத்துவர் கிருஷ்ணன் என்றும் 10ஆம் வகுப்பு வரை படித்த இவர் கடந்த 5 ஆண்டுகளாக அன்வர்திகான்பேட்டையில் மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது

Des: A pseudo doctor who was studying only after studying 10th grade near Arakkonam

Recommended