திருச்சி விமான நிலையத்தில் 6.25 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல்- வீடியோ
  • 5 years ago
திருச்சி விமான நிலையத்தில் 6.25 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யபட்டது



திருச்சியில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு தினமும் விமானங்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை மலேசியா செல்வதற்காக ஏர் ஏசியா விமானம் தயாராக இருந்தது. இதில் பயணம் செய்ய வந்த பயணிகளை வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது மதுரை மாவட்டம் புதூரை சேர்ந்த ஜரினா பேகம் என்பவர் ரூ.6.25 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை கைகுட்டையில் மறைத்து வைத்து கடத்த முயன்றதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ஜரினா பேகத்தை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



Des:; US $ 6.25 lakh was seized at Trichy airport
Recommended