மத்திய சிறையில் மீண்டும் ஆய்வு -வீடியோ

  • 6 years ago
கடலூர் மத்திய சிறையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு ஆயுள் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 200க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறைக்குள் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ள செல்போன், கஞ்சா, பீடி உள்ளிட்ட பொருட்கள் புழக்கத்தில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சிறையில் சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி தலைமையிலான 100 போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஒவ்வொரு அறையாகச் சென்ற போலீசார், கைதிகள் செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யட்ட பொருட்கள் பயன்படுத்துகின்றனரா, சிறை வளாகத்தில் அவை பதுக்கிவைக்கப்பட்டுள்ளனவா என சோதனை நடத்தினர். சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை

Des: Hundreds of police have been conducting inspections at Cuddalore Central Jail.

Recommended