உயர் அதிகாரியின் பணி நெருக்கடி.. தற்கொலைக்கு முயன்ற அரசு ஊழியர்!- வீடியோ
  • 6 years ago
திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தில் உயர் அதிகாரியின் பணி நெருக்கடி காரணமாக தற்கொலைக்கு முயன்ற அரசு ஊழியர்



மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே அவனியா புரத்தை சேர்ந்தவர் பாண்டி இவரது மகன் சரவணக்குமார். (வயது 40) இவர் திருச்சி மணப்பாறை நகராட்யில் அலுவலக உதவியாளராக உள்ளார். இங்கு செயற் பொறியாளராக உள்ள மனோகரன் என்பவர் .சரவணக்குமாருக்கு பணி நெருக்கடி அளித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து 3 மாதம் விடுப்பில் இருந்துள்ளார். பின்னர் புதிய நகராட்சி ஆணையாளராக சுதா என்பவர் பொறுப்பு ஏற்றதும் பணியல் சேர்ந்த சரவணகுமாருக்கு பழைய படி மனோகரன் தொந்தரவு தந்துள்ளர், மேலும் இரு வருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மனோகரன் தாக்கியுள்ளார். இது தொடர்பாக சரவணக்குமார் அளித்த புகாரில் மேல் நடவடிக்கை எடுக்க வலியுருத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்த நிலையில் மனோகரன் அ தி மு க பிரமுகர்கள் துணையுடன் சரவணக்குமார் மீது புகார் செய்ததாக கூறப்படுகிறது, இதனால் மனமுடைந்த சரவணக்குமார் தனது தற்கொலை முயற்ச்சி குறித்து கடிதம் எழுதி வைத்து பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்ய முயன்றார். உடன் அருகிலிருந்தவர்கள் அவரை சிகிட்சைகாக தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவளியாபுரம். காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

DES: Government employee who attempted suicide due to the work of the High Commissioner in Avaniyapuram near Thiruparankundram

Recommended