அம்பேத்கர் சிலையை குறிவைத்து உடைக்கும் மர்ம நபர்கள்

  • 6 years ago
சேலம் அருகே அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதால் போலீஸ் குவிக்கபட்டுள்ளனர்



சேலம் மாவட்டம் வெள்ளாப்பட்டியில் அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் இரவு சேதப்படுத்தி சென்று விட்டனர்.இதில் அம்பேத்கர் சிலை இரண்டு கைகள் முழுவதும் சேதமடைந்தது. சம்பவத்தை அறிந்த சேலம் துணை கமிஷனர் தங்கதுரை அம்பேத்கர் சிலையை பார்வையிட்டு சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.இதை தொடர்ந்து சிலை சேதமடைந்ததை அறிந்து பல்வேறு அரசியல் கட்சியினர் திரண்டனர்.மேலும் கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இச்சம்பதால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது.

The police have been deployed for damaging the Ambedkar statue near Salem

Recommended